ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இன்று பகல் 2 மணிக்கு கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் தேரர்கள், சிவில் அமைப்புக்கள் என பலர் கலந்து கொள்ள உள்ளதாகவும் ஹர்ஷன ராஜகருணா மேலும் தெரிவித்துள்ளார்.