ஒன்பது மாகாண சபைகளில், 6 மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் நிறைடைந்துள்ள நிலையில், விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

தொகுதி வாரி அடிப்படையில் தேர்தலை நடத்துவதற்கு, எல்லை நிர்ணயப் பணிகள் பூர்த்தியடையாதுள்ள காரணத்தினால், மாகாண சபைத் தேர்தலை முன்னர் காணப்பட்ட விகிதாசார பிரதிநிதித்துவ முறைக்கமைய, 25 சதவீதம் அவசியம் பெண்களின் பிரதிநிதித்துவம் இருக்கும் வகையிலான திருத்தச் சட்டத்தை மேற்கொள்வதற்கு, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா சமர்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.