வலுக்கட்டாயமாகவும் சட்டப்பூர்வமற்ற விதத்திலும் என்னை பிரதமர் பதவியில் இருந்து அகற்றுவது இலகுவான செயல் அல்ல என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வீரகெட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 30 அமைச்சுகளுக்கு, மேலதிகமாக பொலிஸ் பாதுகாப்பு வழங்கும் முகமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமையவே, 30அமைச்சுகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.