மொரட்டுவை பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றம் வழங்கிய தமிழருவி 2018 இதழ் வெளியீட்டு நிகழ்வு இன்றுமாலை 3.00மணியளவில் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் பத்மநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினராக மொரட்டுவை பல்கலைக்கழக உபவேந்தர் K.K.C.K பெரேரா அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பிரதியமைச்சர் அங்கஜன் ராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், தர்மலிங்கம் சித்தார்த்தன், கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பாஸ்கரா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more