PLOTE மற்றும் DPLF எனும் பெயர்களில் அல்லது அப் பெயர்களுடன் இணைந்த வகையில் முகவரியிட்டு, தனியாகவோ, குழுவாகவோ இயங்கி வரும் சமூக வலைத்தளங்களை, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்திவிடுமாறு அனைத்து கழக உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

தொடர்ந்தும், இவ்வாறான சமூக வலைத்தளங்கள் இயங்குமாயின், அதன்மூலம் முன்வைக்கப்படும் கருத்துக்கள், விமர்சனங்கள் எவற்றிற்கும் கழகம் பொறுப்பேற்க மாட்டாது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் காலங்களில், கழகத் தலைமையின் அனுமதியின்றி, PLOTE மற்றும் DPLF எனும் பெயர்களை சம்பந்தப்படுத்தி இயங்கும் சமூக வலைத்தளங்களோடு கழக உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த விடயங்கள் பற்றிய தீர்மானம் கடந்த 04.11.2018 அன்று வவுனியாவில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.