திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாம்பல்தீவு, ஆத்திமோட்டை பிரதேசத்தில் நேற்று 1940 கிராம் TNT வெடிமருந்துகளுடன் 29 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனை திருகோணமலை பிராந்திய விஷத் தன்மையுடைய போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விற்பனைக்காக பதுக்கப்பட்டிருந்த வேளையிலே வெடிபொருட்களை கைப்பற்ற முடிந்ததாக விஷத் தன்மையுடைய போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களையும் கைதுசெய்யப்பட்ட இளைஞனையும் நிலாவெளிபொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் விஷத்தன்மையுடைய போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் கூறியுள்ளனர்.