யாழ். சிறுவர் நீதிமன்றிற்கு அருகில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. யாழ். கொய்யாத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய விமலதாஸ் ஜோசப் ஜெபர்சன் என்பவரே சடலமாக பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

கடற்றொழில் செய்யும் இவர், இந்த வீட்டிற்கு சென்று அங்கு உறங்கிய உள்ள நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், அந்த பகுதிக்குச் சென்ற நபர்கள் இவர் சடலமாக கிடப்பதைக் கண்டு யாழ். பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலம் தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்திருந்தனர்.