Header image alt text

சுவிற்ஸர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி. கட்சியின் சார்பில் தூண் நகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண் போட்டியிடுகின்றார்.

தர்ஷிகா கிருஸ்ணானந்தம் அங்கு தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் செயற்பட்டு வருகின்றார். இதேவேளை, இவர் பிரதேச தமிழ் மக்களின் மதம் மற்றும் இந்துமதம், கலாச்சாரம் தொடர்பான ஆலோசகர் பட்டியலில் ஓர் ஆலோசகராக தூண் நகரசபையில் இணைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. Read more

ஆளும் கட்சியின் தெரிவுக்குழுவிற்கு ஏழு உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த பாராளுமன்ற தெரிவுக் குழுவில் டினேஷ் குணவர்தன, எஸ்.பி.திஸாநாயக்க, நிமால் சிரிபால, மகிந்த சமரசிங்க, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகிய ஏழு ஆளும் கட்சி உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி ஏ9 வீதியில் மத்திய கல்லூரிக்கு முன்பாக உள்ள உயரழுத்த மின் கம்பத்துடன் இராணுவ கனரக வாகனம் ஒன்று மோதியதில் மின் கம்பம் முறிந்து விழுந்துள்ளது. நேற்றுமாலை 4.45 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அருகில் மின்சார சபை அலுவலகம் என்பதனால் மின்சார சபை உத்தியோகத்தர்கள் விரைந்து செயற்பட்டு அனர்தத்தை தவிர்த்துள்ளனர். பரந்தன் பகுதியில் இருந்து இரணைடுமடு நோக்கி சென்றுகொண்டிருந்த இராணுவத்தின் கனரக வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதனால் குநித்த விபத்து எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.