Header image alt text

முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 27ஆம் திகதி காலை 10 மணிக்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2008, 2009ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவருக்கு அடைக்கலம் வழங்கியதாக ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. Read more

வவுனியா – குருமன்காட்டுப் பகுதியில், ஒட்டோவில் பல ஆயுதங்களுடன் சென்ற இளைஞனை, நேற்றிரவு 8.30 மணியளவில் வவுனியா போக்குவரத்து பொலிஸார் துரத்திப்பிடித்து கைதுசெய்துள்ளனர்.

வவுனியா – தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா – குருமன்காட்டுப் பகுதியில், போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது வேகமாக வந்த ஓட்டோவை வழிமறித்த பொலிஸார், அந்த ஓட்டோ, பொலிஸாரின் சமிஞ்கையை பொருட்படுத்தாது சென்றுள்ளது. Read more