இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் பொதுநலவாய அமைப்பின் விசேட பிரதிநிதியொருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கை வரும் அவர் ஜனாதிபதி உட்பட அரசியல் கட்சியின் தலைவர்களை சந்தித்து உரையாடவுள்ளார். அத்துடன் அரசியல் நெருக்கடிகளை தீர்த்து வைக்கும் இராஜதந்திர முயற்சிகளிலும் ஈடுபடுவார் என இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.