புத்தளம் நாத்தாண்டிய வலஹப்பிட்டிய பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு பஸ் ஒன்று பாதையை விட்டு விலகி, நீரோடையில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று பெண்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.