இன்று சர்வதேச விசேட தேவையுடையோர் தினமாகும். இலங்கை மக்கள் தொகையில் 1.7 மில்லியன் பேர் விசேட தேவையுடையோர் என விசேட தேவையுடையோர் அமைப்பின் ஒருங்கிணைந்த முன்னணி தெரிவித்துள்ளது.

1996 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட விசேட தேவையுடையோருக்கான உரிமை சட்டம், இந்நாட்டில் 22 வருடங்களாக புதுப்பிக்கப்படவில்லை என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது