Header image alt text

விழிநீர் அஞ்சலி

Posted by plotenewseditor on 4 December 2018
Posted in செய்திகள் 

அமரர் பொன்னுத்துரை அசோகன் (தோழர் நிசாந்தன்)அவர்கள்-

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் வவுனியா தெற்கிலுப்பைக்குளத்தை வாழ்விடமாகவும் கொண்ட பொன்னுத்துரை அசோகன் (நிசாந்தன்) அவர்கள் இன்று (04.12.2018) மரணமானார் என்பதை நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினைப் பகிர்ந்து கொண்டு, துயரந் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

குறிப்பு: அன்னாரின் பூதவுடல் வவுனியா தெற்கிலுப்பைக்குளத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்றிரவு 8மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்பதோடு, நாளை (05.12.2018) புதன்கிழமை பிற்பகல் இல்லத்தில் இடம்பெறும் கிரியைகளைக் தொடர்ந்து அன்னாரின் பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக பிற்பகல் 3.00மணியளவில் கோயில்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. (தொடர்புகட்கு: 0776059681)

துயர் பகிர்வு

Posted by plotenewseditor on 4 December 2018
Posted in செய்திகள் 

அமரர் செல்லக்கண்டு நடராசா அவர்கள் (தோற்றம் 31.05.1933 மறைவு 04.12.2018)

யாழ். சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்வரும், தோழர் இளங்கோவின் (கெங்காதரன்) தந்தையாருமான செல்லக்கண்டு நடராசா அவர்கள் இன்றுகாலை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினைப் பகிர்ந்து கொண்டு, எமது அஞ்சலியினை காணிக்கையாக்குகின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

குறிப்பு: அன்னாரின் பூதவுடல் சுழிபுரம், நெல்லியான்வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதிக் கிரியைகளைத் தொடர்ந்து நாளை நண்பகல் 12மணியளவில் தகனக் கிரியைகளுக்கான திருவடிநிலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். (தொடர்புகட்கு: இளங்கோ – 0771607393)