அமரர் செல்லக்கண்டு நடராசா அவர்கள் (தோற்றம் 31.05.1933 மறைவு 04.12.2018)

யாழ். சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்வரும், தோழர் இளங்கோவின் (கெங்காதரன்) தந்தையாருமான செல்லக்கண்டு நடராசா அவர்கள் இன்றுகாலை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினைப் பகிர்ந்து கொண்டு, எமது அஞ்சலியினை காணிக்கையாக்குகின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

குறிப்பு: அன்னாரின் பூதவுடல் சுழிபுரம், நெல்லியான்வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதிக் கிரியைகளைத் தொடர்ந்து நாளை நண்பகல் 12மணியளவில் தகனக் கிரியைகளுக்கான திருவடிநிலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். (தொடர்புகட்கு: இளங்கோ – 0771607393)