கிளிநொச்சி இரனைமடுகுளத்தின் வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டுக் கொண்டிருந்த சிறுமி தவறி நீருக்குள் வீழ்ந்த நிலையில் காப்பாற்றப்பட்டு மயிரிழையில் தப்பியுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று மாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றுள்ளது இரணைமடு குளத்தை பார்வையிடுவதற்கு இன்று ஏராளமான பொது மக்கள் கூடியிருந்தனர் அவர்களுடன் சிறுவர்களுமிருந்தனர். இதன்போது சிலர் தங்களது பிள்ளைகளுடன் ஆபத்தான பகுதியான வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டு வந்தனர். இந்நிலையில் சிறுமி ஒருத்தி நீருக்குள் வீழ்ந்து தத்தளித்த போது ஒருவரால் காப்பாற்றப்பட்டுள்ளார். Read more