நண்பரது தாயின் மரணவீட்டுக்கு உந்துருளியில் சென்று திரும்பிய சகோதரர்கள் இருவர், உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. உந்துருளி வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதுண்டு இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இச்சம்பவத்தில் மட்டக்களப்பு திருகோணமலை வீதி வெருகல், மாவடிச்சேனையைச் சேர்ந்த தங்கராசா விஜிகரன் (வயது 21) மற்றும் அவரது ஒன்று விட்ட சகோதரனான சின்னவன் வசந்தராஜ் (வயது 22) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் தமது நண்பனின் தாயொருவர் மரணித்த செய்தி கேட்டு அம்மரண வீட்டுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோதே அவர்கள் பயணித்த உந்துருளி வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியுள்ளது. சேருநுவர காவற்துறை விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.