Header image alt text

இலங்கையின் ரஷ்யாவிற்கான தூதுவர் தயான் ஜயதிலக, ரஷ்யாவிற்கான சீன தூதுவர் லி ஹூயை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கை மக்கள் சீனா தொடர்பில் கொண்டுள்ள உணர்வு பூர்வமான விடயங்களை இலங்கை தூதுவர், சீனத் தூதுவரிடம் தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்களுக்கு இடையில், அரசியல், பொருளாதாரம் போன்ற விடயங்கள்ரூnடிளி; குறித்த கருத்துக்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

மன்னார் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 36 குடும்பங்களைச் சேர்ந்த 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனார்ந்த முகாமைத்துவ நிலைய அதிகாரி தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை இரவு பெய்த கடும் மழையினால் மன்னார் மாவட்டம் தலைமன்னாரில் உள்ள மீள்குடியேற்ற கிராமமான ´பெல்வேறி´ கிராமத்தைச் சேர்ந்த 3 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தலைமன்னாரில் உள்ள பொது மண்டபம் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். பெல்வேறி கிராமத்தைச் சேர்ந்த 36 குடும்பங்களின் 102 பேர் பாதிப்படைந்துள்ள நிலையில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 நபர்களே இடம்பெயர்ந்து பொது மண்டபத்தில் தஞ்சமடைந்துள்ளனர். Read more

கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்களையடுத்து மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை வெள்ளம் காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் கிராமத்தில் வீடொன்றில் தங்கியிருந்த ஒருவர் மின்கசிவு காரணமாக மின்கசிவில் சிக்கி நேற்று முன்தினமிரவு (21-12-2018) உயிரிழந்துள்ளார். பெரியகுளம் கண்டாவளையை சேர்ந்த 56வயதான நல்லதம்பி திருச்செல்வம் என்பவரே உயிரிழந்துள்ளார். Read more

முல்லைத்தீவு மாவட்டத்தில் 12651பேர் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான தொகையை அனர்த்த முகாமைத்துவப்பிரிவு இறுதி அறிக்கையை வெளியிட்டது.

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் இறுதி அறிக்கையின்படி, ஆறு பிரதேசசெலகப் பிரிவுகளிலும் மொத்தமாக 3794குடும்பங்களைச் சேர்ந்த 12651பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை இருபத்தைந்து(25) இடைத்தங்கல் முகாங்களில், 1240குடும்பங்களைச்சேர்ந்த, 3805பேர் தங்கவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.