வடக்கு, கிழக்கு வடமத்திய மாகாணங்ளிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹட் சாலிஹீன் தெரிவித்தார்.
அதேபோல், மட்டக்களப்பு முதல் திருகோணமலை மற்றும் காங்சேன்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்து வீசக் கூடும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை அசாதாரண வானிலை காரணமாக, வடமாகாணத்தில் 22 ஆயிரத்து 823 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனை தெரிவித்துள்ளார். Read more