Header image alt text

அம்பாந்தோட்டை மாவட்டம் தங்காலை, குடாவெல்ல மீன்பிடித்துறை முக பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சூட்டு சம்பவத்தில் காயமடைந்த 5பேரும் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் குழுக்கள் 11 உம் நியமிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா நாடுகளுக்கிடையில் நல்லுறவை வலுப்படுத்திக் கொள்வதற்கும், நிலைபேறான அபிவிருத்தியுடைய உலகினை உருவாக்குவதற்கும் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோஷா அழைப்பு விடுத்துள்ளார்.

தென்னாபிரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மல்லிமாராட்சி தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோஷாவை ஜனாதிபதி விருந்தினர் இல்லத்தில் சந்தித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இச்சந்திப்பின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாழ்த்துக்களை தென்னாபிரிக்க ஜனாதிபதி ரமபோஷா மற்றும் தென்னாபிரிக்க மக்களுக்கு தெரியப்படுத்தியதுடன், Read more