நல்லெண்ண அடிப்படையில் இலங்கைக்கு வருகைத்தந்திருந்த, அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான போர் கப்பல் தனது பயணத்தை நிறைவுத் செய்துக் கொண்டு திருப்பிச் சென்றுள்ளது.

குறித்த கப்பல் கடந்த 21 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டது. அதில் வருகைத்தந்திருந்த அமெரிக்க கடற்படையினர் மற்றும் கடற்படை அதிகாரிகள் இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு, விஜயங்களை மேற்கொண்டிருந்தனர்.