Header image alt text

நாகராசா(பொக்கன்) அவர்களின் தந்தை அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்த நினைவை முன்னிட்டு(29.12.2018)இன்று பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்கும் நிகழ்வு மத்திய குழு உறுப்பினர் மகேந்திரராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் வட மாகாண விவசாய அமைச்சர் கெளரவ.க.சிவநேசன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் கெளரவ.ஜி.ரி.லிங்கநாதன், பிரதேச சபை உறுப்பினர்களான கெளரவ.குகதாசன், யோகராஜா,புளெட் மத்திய குழு உறுப்பினர் மணியன், மற்றும் பொது அமைப்புகளின் தலைவர்கள் பெற்றோர்கள் ,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .

Read more

யாழ் கோப்பாய் கண்ணகி அம்மன் சனசமூகநிலைய மற்றும் ஸ்ரார் விளையாட்டு கழக இளைஞர்களால் சேகரிக்கப்பட்ட வெள்ள நிவாரணப்பொருட்கள் குறித்த இளைஞர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் வடமாகாண முன்னாள் அமைச்சர் க.சிவநேசன் வலி கிழக்கு பிரதேச்சபை உறுப்பினர் இ.செல்வராசா ஆகியோரால் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகர் ம.பிரதீபன் கோம்பாவில் கிராம சேவகர் தேவகி ஆகியோரிடம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் வைத்து இன்று முற்பகல் கையளிக்கப்பட்டன இதனை தொடர்ந்து இப் பொருட்கள் கோம்பாவில் பகுதியால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. Read more

வவுனியா வடக்கு தமிழர் எல்லைக்கிராமமான காஞ்சிரமோட்டை கிராமத்தில் 18 குடும்பங்களுக்கான நிவாரண உதவிகளை வவுனியா திருநாவற்குளம் மக்களின் ஆதரவுடன் கிராம அபிவிருத்திச் சங்கம், தமிழ் தேசிய இளைஞர் கழகம், நகர சபை உறுப்பினர்களான சந்திரகுலசிங்கம் மோகன், சுந்தரலிங்கம் காண்டீபன், ஆற்றலரசி நிலையம் ஆகியோரின் ஆதரவுடன் பொருட்கள் சேகரிக்கப்பட்டு 28/12/2018 அன்று மக்களிடம் கையளித்தார்கள். Read more