இரண்டு கால்களும் இரும்பு கம்பியால் இறுக கட்டப்பட்ட நிலையில் இரண்டு வித்தியாசமான மனித எச்சங்கள் மன்னார் மனித புதைகுழியிலிருந்து நேற்று (06) மீட்கப்பட்டுள்ளது. மன்னார் மனித புதைகுழி அகழ்வுப்பணியானது 112 ஆவது நாளாக நேற்று சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது.
இதுவரை மன்னார் மனித புதைகுழி தொடர்பான பல ஊகங்களை உண்மையாக்கும் வகையில் மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதுவரை நாட்களும் மனித புதைகுழி தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் காணப்பட்டபோதும் குறித்த மனித புதைகுழியில் காணப்படும் மனித எலும்புக்கூடுகள் காணாமலாக்கப்பட்ட தங்கள் உறவுகளாக இருக்கலாமென காணமல் போன உறவுகளின் பெற்றோர் அச்சம் தெரிவித்திருந்தனர். Read more
இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டீ. டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்திற்கு ஏற்ப தற்போதைய பிரச்சினையை மிக விரைவில் இலங்கையின் அரசியல் தலைவர்கள் தீர்க்க வேண்டும் என டெய்லி குவு செய்திக்கு வழங்கிய செவ்வியில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஹெரோய்ன் கொக்கெய்ன், மோபின், அபின் ஆகிய போதை பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 96 பேருக்கு மரணத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் வெளிநாடுகளில் பணிபுரிந்த 220 இலங்கைப் பணியாளர்கள் வெவ்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனரென வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதியும் பாதுகாப்பு சபையின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.
வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தரணிக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் ஒன்றினை பொலிசார் மீட்டுள்ளனர். நேற்று மாலை வீட்டில் இருந்த தனது மகனை நீண்டநேரமாக காணவில்லை என்று அவரது தாயார் எல்லா இடமும் தேடியுள்ளார்.
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் வவுனியா தெற்கிலுப்பைக்குளத்தை வாழ்விடமாகவும் கொண்ட பொன்னுத்துரை அசோகன் (நிசாந்தன்) அவர்கள் இன்று (04.12.2018) மரணமானார் என்பதை நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
யாழ். சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்வரும், தோழர் இளங்கோவின் (கெங்காதரன்) தந்தையாருமான செல்லக்கண்டு நடராசா அவர்கள் இன்றுகாலை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்றுமாலை 4மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.