Posted by plotenewseditor on 30 January 2019
Posted in செய்திகள்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இனால் நடைமுறைப்படுத்தப்படும், புலம்பெயர்ந்து வாழும் தாயக உறவுகளினால், விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் இலண்டன் கிளை உறுப்பினரான திரு. தர்மலிங்கம் சிவபாலன் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்ட நிதியின் மூலம்,
ஒட்டுசுட்டான், முத்துவிநாயகபுரம் பகுதியில் இருந்து பேராதனை பல்கலைக்கழக கலைப்பிரிவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள யுத்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவருக்கு மாதாந்தம் ரூபா 5000/- உதவித் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவியையும், பெற்றோரையும் நேரில் சந்தித்த, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் பொருளாளரும், முன்னாள் வட மாகாணசபை விவசாய அமைச்சருமான கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் நிதியுதவியை வழங்கியிருந்தார்.