ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பிற்பகல் பதவிப்பிரமாணம் செய்தனர்.

அவர்களது பெயர் விவரங்கள் பின்வருமாறு
1. மேல் மாகாணம் – அசாத் சாலி
2. மத்திய மாகாணம் – சத்தேந்திர மைத்ரி குணரத்ன
3. வடமத்திய மாகாணம் – சரத் ஏக்கநாயக்க
4. வடமேல் மாகாணம் – பேசல ஜயரத்ன பண்டார
5. கிழக்கு மாகாணம் – எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.இதேவேளை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, இராஜினாமா செய்துள்ளார்.

அவருடைய வெற்றிடத்துக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குருநாகல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார நியமிக்கப்படலாம் என்றும் தெரியவருகின்றது.