மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான்குளத்தில் மோட்டார் சைக்கிள் வேககட்டுப்பாட்டை இழந்து வீதியில் நிறத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் கொங்கிறீட் கட்டையுடன் மோதி விபத்துக்குள்ளானரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். ஆரையம்பதியைச் சேர்ந்த இளம் கும்பஸ்தரான இராசதுரை ஜீவநாதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு, கல்முனை பிரதானவீதி கிரான்குள வீதி வளைவில் குறித்த நபர் உறவினர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சம்பவதினமான நேற்று மாலை வீதியில் சென்று கொண்டிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்தவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேவேளை உயிரிழந்தவர் அண்மையில் திருமணமான ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.