இன்று மேலும் 4 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனப்படையில் சப்ரகமுவ, ஊவா, வடக்கு மற்றும் தெற்கு ஆகிய மாகாணங்களுக்கான ஆளுனர்கள் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய கடந்த வாரம் அனைத்து ஆளுனர்களும் பதவி விலகி இருந்தனர். அதனடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை மேல், மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான ஆளுனர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். எனவே இன்றைய தினம் மீதமாக உள்ள ஏனைய 4 மாகாணங்களுக்கான ஆளுனர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இதேவேளை வடக்கு மாகாண ஆளுநராக தமிழர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமித்திருந்தார். இந் நிலையில் வடக்கு மாகாண ஆளுநராக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் தந்தையான மார்சல் பெரேராவை நியமிப்பதற்கு ஜனாதிபதி திட்டமிட்டிருந்த போதிலும் இறுதி நேரத்தில் அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது.

அத்துடன் வட மாகாண ஆளுநராக முன்னான் அமைச்சர் அதாவுட செனவிரத்தினவையும் நியமிக்குமாறு சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. இதனைவிட கலாநிதி விக்கினேஸ்வரன் மற்றும் வட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா மற்றும் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் ஆகியோரின் பெயர்களும் சிபாரிசு செய்யப்பட்டிருந்தன.

ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதி விருப்பம் கொண்டிருப்பதாக தெரிகின்றது. எனவே இன்னும் சில தினங்களுக்குள் வட மாகாணம் உட்பட ஏனைய நான்கு மாகாணங்களுக்கான ஆளுநர்களை ஜனாதிபதி நியமிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.