கிளிநொச்சி மாவட்டம் கோணாவில் கிராமத்தில் 05.01.2019 சனிக்கிழமை மாலை 4மணியளவில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. லண்டனில் வசிக்கும் தர்மலிங்கம் நாகராஜா (பொக்கன்) அவர்கள் தனது தந்தையாரான கந்தையா தர்மலிங்கம் அவர்களின் நினைவாக இதற்கான நிதியுதவியினை வழங்கியிருந்தார்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஆதரவாளர் திருமதி ரகுநாதன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது 65 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழு உறுப்பினர்கள் வே. சிவபாலசுப்பிரமணியம், க.மகேந்திரன், கட்சி உறுப்பினர் சந்திரன்,அக்கராயன் கிராம சேவையாளர் சபாரட்ணம், கோணாவில் கிராம சேவையாளர் சிவநேசன், இளைஞர்கள், பெற்றோர்கள், பயன்பெறும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.