கிளிநொச்சி 155ம் கட்டை மூந்நூறு ஏக்கர் திட்டம் பகுதியில் நேற்று முன்தினம் கிணற்று மண் சரிந்ததால் கிணற்றுக்குள் தவறி விழுந்து புவனேஸ்வரன் டிலானி என்ற சிறுமி உயிரிழந்தார்.

அவரது இறுதி நிகழ்வுகள் இன்று அவரது இல்லத்தில் இடம்பெற்றிருந்தது. சிறுமியினுடைய இல்லத்திற்கு இன்று (09.01.2019) சென்றிருந்த ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழு உறுப்பினர் வே.சிவபாலசுப்பிரமணியம் அவர்கள் சிறுமியின் பெற்றோர்க்கு ஆறுதல் கூறியதோடு, லண்டனில் வசிக்கும் தர்மலிங்கம் நாகராஜா (பொக்கன்) அவர்களால் வழங்கப்பட்ட சிறுதொகை நிதியுதவியையும் கையளித்திருந்தார்.