புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் 2018ஆம் ஆண்டிற்கான தனது விசேட நிதி ஒதுக்கீட்டில் நவாலி வடக்கு J/134 கிராம அலுவலர் பகுதியிலுள்ள குடத்தனைவீதி புனரமைப்புப் பணிகளை 06.01.2018 ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.

இதன்போது 2019ஆம் ஆண்டுக்கான பசுமைப் புரட்சி திட்டத்தின்கீழ் இரு வருடங்களில் பயன்தரக்கூடிய 100 மாங்கன்றுகள் முதல் கட்டமாக நவாலி மருதடி விநாயகர் சனசமூக நிலைய முன்றலில் வைத்து மக்களுக்கு வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன், வலி தென்மேற்கு பிரதேசசபை தவிசாளர் ஜெபநேசன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் யுகராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.