மன்னார் பேசாலை பிரதேச வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வண்டி சாரதி மீது நேற்று வியாழக்கிழமை இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், குறித்த அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதி காயமடைந்துள்ள நிலையில் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவத்தை பேசாலை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் ஈற்றன் பீரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், பேசாலை பிரதேச வைத்தியசாலையில் இருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நோயாளர் ஒருவர் நேற்று இரவு அம்பியூலன்ஸ் வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார். Read more