Header image alt text

மன்னார் பேசாலை பிரதேச வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வண்டி சாரதி மீது நேற்று வியாழக்கிழமை இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், குறித்த அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதி காயமடைந்துள்ள நிலையில் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவத்தை பேசாலை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் ஈற்றன் பீரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், பேசாலை பிரதேச வைத்தியசாலையில் இருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நோயாளர் ஒருவர் நேற்று இரவு அம்பியூலன்ஸ் வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார். Read more

கிழக்கு மாகாண ஆளுனர் நியமனத்திற்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை முதல் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மக்கள் ஒன்றியம் என்னும் தலைப்பில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான சுவரொட்டிகளும் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. ஜனாதிபதியே, பொருத்தமற்ற ஹிஸ்புல்லாவை நீக்கி கிழக்கு மக்களை பாதுகாத்திடு என்னும் தலைப்பில் இந்த ஹர்த்தால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. Read more

விசேட பிரதேச அபிவிருத்திக்கான அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக வீ.இராதாகிருஷ்ணன் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இதேவேளை, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் தொடர்பான அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக ரவீந்திர அமரவீரவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். மேலும், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதி அமைச்சராக அப்துல்லா மஹரூப்வும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். Read more

முல்லைத்தீவு – அளம்பில் பகுதியில் இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்கு நில அளவீடு செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த பகுதியில் உள்ள 5 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவ முகாம் அமைப்பதற்கான காணி அளவீடு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அளம்பில் சந்தியில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். Read more