ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 2015 ஜனவரி 8ம் திகதி கொள்கைகளிற்கு தான் துரோகமிழைக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களிற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தலைமைத்துவத்தை வழங்குமாறு ஜனாதிபதியை முன்னாள் ஜனாதிபதி அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கையில் இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான மக்களால் நிராகரிக்கப்பட்ட தரப்புடன் கூட்டுச்சேரும் சிறிசேனவின் முடிவை தான் ஆதரிக்கவில்லை எனவும் சந்திரிகா தெரிவித்துள்ளார். 2005 முதல் 2015 முதல் இந்த நாட்டில் காணப்பட்ட இலஞ்சம் ஊழல் மற்றும் வன்முறைகளின் அளவை நான் இன்னமும் மறக்கவில்லை,ஜனவரி 2015யில் மிகதீவிரமாக இடம்பெற்ற தேர்தல் மோதலில் மக்கள் அந்த குழுவினரை நிராகரித்ததை நான் மறந்துவிடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.