வவுனியா இரட்டைப்பெரியகுளம் குளத்தில் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று பகல் 6 மாணவர்கள் குறித்த குளத்தில் நீராடச் சென்றபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குளத்தில் இருந்த கல் ஒன்றின் மீது ஏறியபோது வழுக்கி விழுந்ததிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா, வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த 14 இற்கும் 15 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ஒரு சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் பிரதேசவாசிகள் தொடர்ந்தும் தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.