Header image alt text

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (19.01.2019) யாழ். கந்தரோடையில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் சம்பந்தமாக அவர்களது முன்மொழிவுகள் பெறப்பட்டு, பெறப்பட்ட முன்மொழிவுகளைக் கொண்டு மானிப்பாய் தொகுதியில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் உத்தேசித்து அந்த Nவைலத்திட்டங்கள் சம்பந்தமாக வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர்களுடன் மேற்படி கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். இதில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிகாமம் தெற்கு பிரதேசசபை தவிசாளர் தர்சன், உபதவிசாளர் பரமேஸ்வரலிங்கம், Read more

யாழ். கைதடி குருசாமி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று (18.01.2019) வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30மணிளவில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய முதல்வர் நா.ஜெயபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வின் முதன்மை விருந்தினராக புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரி பிரதேச சபையின் உபதலைவர் மயூரன், இலங்கையர் வாசுதேவன் (ஓய்வுநிலை உதவிச் செயலாளர், திட்டமிடல், சுகாதார அமைச்சு, மத்திய மாகாணம்) செல்வி அ.நிருபராணி (உதவிக் கோட்டக்கல்வி பணிப்பாளர், விஞ்ஞானம், தென்மராட்சி கல்வி வலயம், ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more