யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (19.01.2019) யாழ். கந்தரோடையில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் சம்பந்தமாக அவர்களது முன்மொழிவுகள் பெறப்பட்டு, பெறப்பட்ட முன்மொழிவுகளைக் கொண்டு மானிப்பாய் தொகுதியில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் உத்தேசித்து அந்த Nவைலத்திட்டங்கள் சம்பந்தமாக வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர்களுடன் மேற்படி கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். இதில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிகாமம் தெற்கு பிரதேசசபை தவிசாளர் தர்சன், உபதவிசாளர் பரமேஸ்வரலிங்கம், வலிகாமம் தெற்கு பிரதேச சபையினுடைய வெற்றிபெற்ற உறுப்பினர்கள் மற்றும் வட்டாரத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களும் பங்கேற்று தங்களுடைய அபிவிருத்தி திட்டங்களை நாடாளுமன்ற உறுப்பினரிடம் முன்மொழிவாக வழங்கினார்கள். இதில் நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் யுகராஜூம் கலந்துகொண்டிருந்தார்.