இலங்கையின் தேசிய நலன் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை அடைந்து கொள்வதற்கு உதவும் வகையிலான ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு பூரண ஆதரவை வழங்குவதுடன், அனைத்து விதங்களிலும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராகவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
திருகோணமலையில் ஐந்து மாணவர்களின் படுகொலை இடம்பெற்று கடந்த 2 ஆம் திகதியுடன் 13 வருடங்கள் பூர்த்தி அடைந்துள்ள நிலையில், இன்னமும் இவ்விவகாரம் தொடர்பிலான குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. Read more
நாங்கள் எதிர்க்கட்சிப் பதவி விவகாரத்தில் இப்போதே எவரொருவர் தொடர்பிலும், எவ்வித கருத்துக்களையும் கூற விரும்பவில்லை எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் மாவை.சேனாதிராஜா, இவ்விடயம் தொடர்பில் கலந்தாலோசித்து தீர்வு காண்பதற்கான கால அவகாசம் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமையை ஏற்குமாறு, வட மாகாண முன்னாள் முதலைமைச்சரும் நீதியரசருமான சி.வி விக்னேஷ்வரனுக்கு, கூட்டணியின் செயலாளர் கநாயகம் வீ. ஆனந்த சங்கரி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று விடுக்கப்பட்டுள்ள ஊடக, கூட்டணியின் செயலாளர் நாயகம் வி. ஆனந்த சங்கரி கூறியுள்ளதாவது,
இரட்டை குடியுரிமையைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜெயகொடி தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தினுள் மாத்திரம் சமூகவலைத்தளங்கள் தொடர்பில் 2 ஆயிரத்து 500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கட்டணம் சிவனடிபாதமலை பருவகாலம் ஆரம்பித்து 20 நாட்கள் கடந்துள்ள நிலையில், இம்முறை கடந்த காலங்களை விட இம்முறை அதிகளவான யாத்ரீகர்கள் வருகை தந்துள்ளனர்.
இலங்கைக்கு தமது பூரண ஒத்துழைப்பினை தொடர்ந்தும் வழங்கத் தயார் என சீன ஜனாதிபதி சீ ஜின் பிங் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவிற்கு தெரிவித்துள்ள புது வருட வாழ்த்துச் செய்தியில் சீன ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பிற்பகல் பதவிப்பிரமாணம் செய்தனர்.
கொழும்பு கோட்டையிலிருந்து மாலபே வரையான குறுந்தூர ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கு, ஜப்பான் அரசாங்கம் கடனுதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
வவுனியா, செட்டிகுளம், இராமியன்குளத்தில் மக்களின் காணிகளை கையகப்படுத்திய இராணுவத்தினர் விவசாயம் செய்து வருவதாகவும் அதனை உடன் விடுவிக்க கோரியும் பாரியளவிலான ஆர்ப்பாட்மொன்று இன்று இடம்பெற்றது.