Header image alt text

இலங்கையின் தேசிய நலன் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை அடைந்து கொள்வதற்கு உதவும் வகையிலான ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு பூரண ஆதரவை வழங்குவதுடன், அனைத்து விதங்களிலும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராகவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

திருகோணமலையில் ஐந்து மாணவர்களின் படுகொலை இடம்பெற்று கடந்த 2 ஆம் திகதியுடன் 13 வருடங்கள் பூர்த்தி அடைந்துள்ள நிலையில், இன்னமும் இவ்விவகாரம் தொடர்பிலான குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. Read more

நாங்கள் எதிர்க்கட்சிப் பதவி விவகாரத்தில் இப்போதே எவரொருவர் தொடர்பிலும், எவ்வித கருத்துக்களையும் கூற விரும்பவில்லை எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் மாவை.சேனாதிராஜா, இவ்விடயம் தொடர்பில் கலந்தாலோசித்து தீர்வு காண்பதற்கான கால அவகாசம் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

மேலும் எதிர் கட்சித் தலைவர் பதவி தொடர்பில் எதிர்வரும் 8 ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்பதாக இடம்பெறும் எமது கட்சிக் கூட்டம், கட்சித் தலைவர் கூட்டம் என்பவற்றில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் எடுப்போம் எனவும் தெரிவித்தார்.

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமையை ஏற்குமாறு, வட மாகாண முன்னாள் முதலைமைச்சரும் நீதியரசருமான சி.வி விக்னேஷ்வரனுக்கு, கூட்டணியின் செயலாளர் கநாயகம் வீ. ஆனந்த சங்கரி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று விடுக்கப்பட்டுள்ள ஊடக, கூட்டணியின் செயலாளர் நாயகம் வி. ஆனந்த சங்கரி கூறியுள்ளதாவது,

சுயநலத்தை உதறி தள்ளிவிட்டு, ஒன்றுபட்டு செயற்பாட வருமாறு, அக்கறைக் கொண்ட தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் நாளாந்தம் வளர்ந்துகொண்டே போகின்றதேயன்றி, தீர்வு எதுவும் ஏற்படுவதாக தெரியவில்லை என்றும் நடைமுறைகளை அவதானிக்கும்போது மேலும் எத்தனை தீபாவளிகள் தாண்டும் என தெரியவில்லை என்றும் சுயநலம் கருதி சிலர் செயற்பட்டமையாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். Read more

இரட்டை குடியுரிமையைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜெயகொடி தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தை ஆக்கிரமித்து செயற்பட்டுள்ளது. இரட்டை குடியுரிமையைக் கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு செயற்பட்டிருந்தனர். தங்களது இரட்டை குடியுரிமை விவகாரத்தை மூடி மறைப்பதற்கு அவர்களால் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுவதாக சிசிர ஜெயகொடி குற்றம் சுமத்தியுள்ளார். Read more

கடந்த வருடத்தினுள் மாத்திரம் சமூகவலைத்தளங்கள் தொடர்பில் 2 ஆயிரத்து 500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதில் பெரும்பாலும் பேஸ்புக் போலி கணக்குகள் தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

கட்டணம் சிவனடிபாதமலை பருவகாலம் ஆரம்பித்து 20 நாட்கள் கடந்துள்ள நிலையில், இம்முறை கடந்த காலங்களை விட இம்முறை அதிகளவான யாத்ரீகர்கள் வருகை தந்துள்ளனர்.

அத்துடன் சிவனொளிபாதமலையில் காணப்படும் உணவகங்களில் அதிகளவு கட்டணம் அறிவிடுவதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெனார்ந்துவுக்கு கிடைக்கப்பெற்ற புகாரை தொடர்ந்து நுவரெலியா மாவட்ட பாவனையாளர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். Read more

இலங்கைக்கு தமது பூரண ஒத்துழைப்பினை தொடர்ந்தும் வழங்கத் தயார் என சீன ஜனாதிபதி சீ ஜின் பிங் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவிற்கு தெரிவித்துள்ள புது வருட வாழ்த்துச் செய்தியில் சீன ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான சீன தூதுவர் செங் ஸியுவான் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து, சீன ஜனாதிபதியின் பிரத்தியேக வாழ்த்துச் செய்தியினை கையளித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, புது வருடத்திலும் இரு நாடுகளுக்கு இடையேயான பாரம்பரிய நட்புடனான உறவு தொடரும் என தெரிவித்துள்ளார் என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. Read more

ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பிற்பகல் பதவிப்பிரமாணம் செய்தனர்.

அவர்களது பெயர் விவரங்கள் பின்வருமாறு
1. மேல் மாகாணம் – அசாத் சாலி
2. மத்திய மாகாணம் – சத்தேந்திர மைத்ரி குணரத்ன
3. வடமத்திய மாகாணம் – சரத் ஏக்கநாயக்க
4. வடமேல் மாகாணம் – பேசல ஜயரத்ன பண்டார
5. கிழக்கு மாகாணம் – எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவும் இந்நிகழ்வில் பங்குபற்றினார். Read more

கொழும்பு கோட்டையிலிருந்து மாலபே வரையான குறுந்தூர ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கு, ஜப்பான் அரசாங்கம் கடனுதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

இதன்கீழ், 1,850 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது. கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலவும் வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் இந்தக் குறுந்தூர ரயில் மார்க்கத்தை அமைக்கும் நடவடிக்கைகள் இந்த வருடத்திற்குள் ஆரம்பிக்கப்படவுள்ளன. Read more

வவுனியா, செட்டிகுளம், இராமியன்குளத்தில் மக்களின் காணிகளை கையகப்படுத்திய இராணுவத்தினர் விவசாயம் செய்து வருவதாகவும் அதனை உடன் விடுவிக்க கோரியும் பாரியளவிலான ஆர்ப்பாட்மொன்று இன்று இடம்பெற்றது.

வவுனியா, செட்டிகுளம், ஆண்டியாபுளியங்குளம் பள்ளிவாசல் முன்பாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மதவாச்சி மன்னார் வீதியில் ஆண்டியாபுளியங்குளத்தில் மதிய நேர தொழுகையின் பின்னர் சுமார் ஒரு மணிக்கு ஒன்றுகூடிய இஸ்லாமிய மக்கள் தமது பூர்வீக காணிகளை இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும் என கோசங்களை எழுப்பியதுடன் பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.
Read more