Header image alt text

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, எதிர்க்கட்சித் தலைவராக ஏற்குமாறு, சபாநாயகர் கரு ஜயசூரிய, இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் மாநாட்டின் போது கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, எதிர்க் கட்சிகளின் பிரதம கொறடாவாக, மஹிந்த அமரவீரவை ஏற்குமாறு அவர் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் இன்று நியமிக்கப்படவுள்ள நிலையில், தென் மாகாண ஆளுநராகக் கடமையாற்றிய மார்ஷல் பெரேரா, வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று, தகவல்கள் கசிந்துள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவித்தலுக்கமைய, அனைத்து மாகாண ஆளுநர்களும், தங்களது பதவி விலகல் கடிதங்களைக் கையளித்திருந்த நிலையில், மாகாணங்களுக்கான ஆளுநர் பதவிகள், வெற்றிடமாக இருந்து வருகின்றன. இந்நிலையிலேயே, இன்றைய தினம், புதிய ஆளுநர்களுக்கான நியமனங்கள் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more

ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவே என்று அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா கூறியுள்ளார். அந்தக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் பொது மக்களின் எண்ணப்படி தெரிவு செய்யப்படுவார் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

எதிர்வரும் 14 மாதங்களில் பொருளாதாரத்தை பலப்படுத்தி, நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மன்னார் இலங்கை போக்குவரத்து சபை சாலை ஊழியர்கள் உட்பட வட மாகாணத்தில் உள்ள ஏழு சாலைகளின் ஊழியர்கள் இன்று காலை முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிர்வாகத்திறமை அற்ற வட மாகாண பிராந்திய முகாமையாளரினால் இன்றைய காலத்தில் வட பிராந்திய சாலைகள் இழுத்து மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் இயங்கி வருகின்றதாகவும், ஏற்கனவே இ.போ.ச சபையினர் ஆகிய தம்மால் எழுத்துமூலம் உயர் பீடங்களுக்கு அறிவித்துள்ள பத்து குற்றச்சாட்டுகளுக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறாத காரணத்தினாலும், Read more

வவுனியா பொலிஸாருக்கு லஞ்சம் கொடுத்த இரு தனியார் நிறுவன ஊழியர்கள் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வாகனங்களின் வேகத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் அதிவேகத்தினை கணிக்கும் கருவியுடனான பொலிஸ் உருவ பொம்மையொன்று வவுனியா ஏ9 வீதியில் வைக்கப்பட்டிருந்தது. அந்த உருவபொம்பைக்கு இலஞ்சம் வழங்குவது போன்று வீடியோ செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இரு ஊழியர்களை நேற்று முன்தினம் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆயர்படுத்தியுள்ளனர். Read more


புதியபாதை “ஊடாக புதிய சிந்தனையை தந்த சிந்தனை சிற்பி தோழர் சதாசிவம் சிவசண்முகமூர்த்தி(சுந்தரம்) 37வது நினைவுதினம் இன்றாகும்.

1982ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி சித்திரா பதிப்பகத்தில் வைத்து விடுதலை புலிகளினால் அரங்கேற்றப்பட்ட முதல் சகோதரப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்ட நாளும் இதுவாகும்.
தோழர் சுந்தரம் அவர்கள் தமிழீழ விடுதலையை மக்கள் விடுதலை மூலமே அடைய முடியும் என்ற கோட்பாட்டுடன் “புதியபாதை” ஊடாக பொதுவுடமை கொள்கைளையும், புரட்சிகர சிந்தனையையும் ஊட்டிய சிறந்த சிந்தனை சிற்பி. Read more

கிராம எழுச்சித்திட்டத்தின்கீழ் 2மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட கோப்பாய் பிரதேச சபைக்கு உட்பட்ட ஊரெழு மேற்கு ஆலடி வீதி இன்று 01/01/2019 மாலை 4.00மணிக்கு புளொட் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால்
திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வுகள் சமூக ஆர்வலர் முகுந்தன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் அகீபன், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் யுகறாஜ்,
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கவிதா, சமூக ஆர்வலர் வசந்தி மற்றும் பிரதேச மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். Read more

புளெட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்
யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீ தூர்க்கா சனசமுக நிலையதில் பிரதேச மக்களுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் இ.கெங்காதரன் தலைமையில் 30/12/2018 மாலை இடம்பெற்ற இந் நிகழ்வில்
இன்றைய அரசியல் சூழ்நிலைகள்,அபிவிருத்திகள் மற்றும் இன்றைய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது. Read more