பாலியல் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிபுணர் ஒருவர் உண்மையைக் கண்டறியும் நோக்குடன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளார்.ஈ பாலியல் மற்றும் பால்நிலை வன்முறைகள் மற்றும் பாரபட்ச வன்முறைகளைத் தடுக்கும் ஐக்கிய நாடுகளின் சுதந்திர நிபுணர் விக்டர் மட்ரிகல் பொர்லோஸ், இந்த விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது. இந்த விஜயத்துக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று, ஆணையகத்தின் விசேட விசாரணையாளர் அலைஸ் ஒஸென்பெயன் தெரிவித்துள்ளார்.