Header image alt text

பாலியல் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிபுணர் ஒருவர் உண்மையைக் கண்டறியும் நோக்குடன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளார்.ஈ பாலியல் மற்றும் பால்நிலை வன்முறைகள் மற்றும் பாரபட்ச வன்முறைகளைத் தடுக்கும் ஐக்கிய நாடுகளின் சுதந்திர நிபுணர் விக்டர் மட்ரிகல் பொர்லோஸ், இந்த விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது. இந்த விஜயத்துக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று, ஆணையகத்தின் விசேட விசாரணையாளர் அலைஸ் ஒஸென்பெயன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து இலங்கையர்கள் சட்டவிரோதமான படகு பயணத்தின் மூலம் அவுஸ்திரேலியாவை சென்றடைவதை தடுப்பதற்கு அவுஸ்திரேலியா விசேட கலந்துரையாடலை நடத்தியுள்ளது.

இதற்காக அவுஸ்திரேலியாவின் வான்படை தளபதி ரிட்சர் ஓவென் தலைமையிலான பிரதிநிதிகள் குழு ஒன்று இந்தியாவின் தமிழக மற்றும் புதுச்சேரி கடற்படை பிரதானி அலோக் பட்நகரை சந்தித்துள்ளது. தமிழகத்தில் ஏதிலி முகாம்களில் வசிக்கின்றவர்களும், இலங்கையில் இருந்து புதிதாக செல்லும் சிலரும் அங்கிருந்து கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்லும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. Read more

நாட்டில் போதைப்பொருளை இல்லாதொழிப்பதற்கு புலிகளை அழித்தமையைப் போன்றே இராணுவத்தினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினரை உள்ளடக்கிய விசேட படையணியை அமைத்தல் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ள கண்டனச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பிலான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இக்கருத்து அதிர்ச்சியளிக்கின்றது. Read more

யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் உடலில் எரிகாயங்களுடன் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இடைக்காடு அக்கரை பகுதியைச் சேர்ந்த விஸ்ணுகுமார் தனுசன் (வயது 19) எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஊரிக்காடு பகுதியில் கோழிப்பண்ணை ஒன்றில் குறித்த இளைஞன் வேலை செய்து வருவதாகவும், நேற்று மாலை கோழிப்பண்ணை கழிவு தொட்டிக்குள் விழுத்து கிடந்ததை அவதானித்தவர்கள் அவரை மீட்டு ஊரணி வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர். Read more