Header image alt text

அமெரிக்காவின் பாதுகாப்பு பிரிவுடன் அரசாங்கம் உடன்படிக்கை செய்துகொள்ளவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். அரசாங்கம் ஒருபோதும் அதுபோன்ற உடன்படிக்கையை செய்துகொள்ளவில்லை என்று பிரதமர் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பிரேரணையை இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்காமல் இருக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது. நேற்று (06) இரவு ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பிரேரணையை இன்று விவாதத்திற்கு எடுக்குமாறு நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்ல கருத்து வெளியிட்டுள்ளார். இருப்பினும் இதன்போது எதிர்கட்சியினர் குறித்த பிரேரணை எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது. Read more