Header image alt text

கல்வியியற் கல்லூரிகளுக்காக, மாணவர்கள் தபால் மூலமும் விண்ணப்பங்களை அனுப்புவதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்களை, இணையத்தளம் ஊடாக விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்கள் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு, தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, கல்வியியற் கல்லூரி ஆணையாளர் நாயகம் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார். Read more

இலங்கையில், ஜப்பான் நாட்டு உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் நீர் வழங்கல் திட்டங்கள் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவக் கருத்திட்டங்கள் தொடர்பாக, ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமை, உயர்கல்வி அமைச்சிலுள்ள அலுவலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினார்.

மேலும்,அடுத்த மாதம் கொழும்பில் நடத்தப்படவுள்ள நீர் வழங்கல், கழிவு நீர் முகாமைத்துவ கருத்திட்டங்களின் செயலமர்வில் ஜப்பானிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கொங்கிரீட் கொள்கலன்களின் பயன்பாடு தொடர்பான கருத்தரங்குக்கு அதிதியாகக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அத்துடன், உயர் கல்வித் துறையில் ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான தொடர்பு சம்பந்தமாகவும், இதன்போது கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் வாழ்கின்ற இந்தியவம்சாவளி மக்களை ஒன்றிணைக்க ‘அகதேசிய முற்போக்கு கழகம்’ எனும் அரசியல் கட்சி உருவாக்கப்படுள்ளது.

கடந்த சில வருடங்களாக வவுனியாவில் இருந்து இந்திய வம்சாவளி மக்களின் நலன்களுக்காக குரல் கொடுத்துவந்த ´வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியமானது´ அகதேசிய முற்போக்கு கழகம் எனும் பெயரில் அரசியல்கட்சியாக தற்போது பதியப்பட்டுள்ளது. இக்கட்சியின் தலைவராக முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராயா நியமிக்கப்பட்டுள்ளார். ‘அகதேசிய முற்போக்கு கழகம்’ எனும் அரசியல் கட்சியின் உருவாக்கம் தொடர்பில் அதன் தலைவர் எம்.பி.நடராயா கூறுகையில், Read more