இலங்கை உள்ளிட்ட நாடுகளின் ஏதிலிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமை அவுஸ்திரேலிய அரசாங்கம் மீண்டும் திறக்கவுள்ளது. அந்த நாட்டின் பிரதமர் ஸ்கொட் மொரிசன் இதனை அறிவித்துள்ளார்.

நவுரு மற்றும் மானஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏதிலிகள் சுகவீனமுறும்போது, அவர்கள் அவுஸ்தரேலியாவிற்கு சென்று மருத்துவ வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையிலான சட்ட மூலம் ஒன்று அந்த நாட்டின் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. எதிர் கட்சிகளான பசுமை கட்சியும், தொழிற்கட்சியும் இணைந்து இச் சட்டமூலத்தை வெற்றிப்பெறச் செய்தன. இச் சட்ட மூலத்துக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தபோதும், அரசாங்கத்திற்கு நாடாளுமன்றில் தோல்வியே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஏதிலிகளுக்கான மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக அவுஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிறிஸ்மஸ் தீவு முகாமை மீளத் திறக்கவிருப்பதாக ஸ்கொட் மொரிசன் அறிவித்துள்ளார்.