Header image alt text

கச்சதீவு அந்தோனியார் திருவிழாவை முன்னிட்டு உள்நாட்டு படகுகளுக்கு அனுமதி வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. அத்துடன், மீனவர்களின் வள்ளங்களுக்கும் அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கச்சதீவு அந்தோனியார் திருவிழா எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு மீனவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, அவர்களின் படகுகளுக்கு அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. Read more

மஹா சிவரார்த்திரி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 5ம் திகதி, நாளை மறுதினம் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லாவினால் கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு இது குறித்த பணிப்புரை விடுத்துள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நிஷாம் தெரிவித்தார். அன்றைய தினத்திற்கான பாடசாலை நடவடிக்கைகள் பிரிதொரு தினத்தில் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.