Header image alt text

சகல அரசியல் கட்சிகளினதும் வருடாந்த கணக்கறிக்கை, கொள்கை பிரகடனம் மற்றும் கட்சியின் யாப்பு என்பவற்றை வெளிப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய குறித்த தகவல்களை தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சகல அரசியல் கட்சிகளையும் தெளிவுப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. அரசியல் கட்சிகள் தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ள நாட்டு மக்கள் அதிக விருப்பம் கொண்டுள்ளதாகவும் அது தொடர்பான கேள்வி நாளாந்தம் அதிகரித்து வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். Read more

மதவாதக் குழு ஒன்றினால் நேற்று உடைக்கப்பட்ட மன்னார் – திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கான வளைவை மீண்டும் தற்காலிகமாக 4 தினங்களுக்கு அமைப்பதற்கு மன்னார் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த வளைவு நேற்று குழு ஒன்றினால் உடைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் மன்னார் காவற்துறை நீதவானிடம் முறையிட்டமைக்கு அமைய, முறைப்பாட்டை விசாரணை செய்த பதில் நீதவான் இ.ஹயஸ் செல்தானோ, குறித்த வளைவை தற்காலிகமாக 4 தினங்களுக்கு அமைக்க அனுமதி வழங்கியுள்ளார். இதேவேளை, மன்னார் – திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்காக சீரமைக்கப்பட்ட வளைவு நேற்றையதினம் மதவாதக் குழு ஒன்றினால் உடைக்கப்பட்டமைக்கு எதிராக பல்வேறு தரப்பினரால் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் 25 வௌ;வேறு இலக்கத் தகடுகள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. வருடாந்த சிவராத்திரி திருவிழா வழிபாட்டுக்காக நேற்று முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் ஆலயவளாகம் ஒன்றில் பொதுமக்களால் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது குறித்த ஆலயவளாகப் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் 25 வௌ;வேறு இலக்கங்களுடன் தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரதேச மக்கள் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். Read more

யாழ் மாவட்டத்தின் வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த காணிகளில் பொதுமக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

படையினர் வசமிருந்த காணிகளை விடுவிக்கும் நிகழ்வு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றபோது யாழ் மாவட்ட இராணுவத் தளபதி தர்சன கெட்டியாராச்சி விடுவிக்கப்பட்ட காணிக்கான பத்திரத்தை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகத்திடம் கையளித்துள்ளார். தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே 251, 253, 246 ஆகிய கிராம சேவகர் பரிவிலுள்ள காணிகளே இதன்போது விடுவிக்கப்பட்டுள்ளன. Read more

மன்னார் திருகேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார பலகை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக திருகேதீஸ்வர ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. மாந்தை சந்தியில் பலவருட காலமாக தற்காலிக அலங்கார பலகையொன்று காணப்பட்டதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

சிவராத்திரியை முன்னிட்டு, அந்த அலங்கார பலகையை தாம் புதுப்பிக்கச் சென்ற வேளையில், கிறிஸ்தவ பாதிரியார்களின் தலைமையிலான சில குழுவினர் வருகை தந்து அதற்கு இடையூறு விளைவித்ததாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த அலங்கார பலகையையும் அந்தக் குழுவினர் உடைத்தெறிந்துள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். Read more

மன்னாரில் இருந்து யாழ்பாணம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பயனித்த இளைஞர் குழு எதிரில் வந்த உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிர் இழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.

மன்னாரில் இருந்து நேற்று மதியம் மூன்று மோட்டார் சைக்கிள்களில் 6 பேர்கள் கொண்ட இளைஞர் குழு யாழ்பாணம் நோக்கி பயணித்த வேலையில் பூநகரி பகுதியில் உள்ள வளைவு ஒன்றில் எதிரே வந்த உழவு இயந்திரத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளனர். Read more