முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் 25 வௌ;வேறு இலக்கத் தகடுகள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. வருடாந்த சிவராத்திரி திருவிழா வழிபாட்டுக்காக நேற்று முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் ஆலயவளாகம் ஒன்றில் பொதுமக்களால் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது குறித்த ஆலயவளாகப் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் 25 வௌ;வேறு இலக்கங்களுடன் தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரதேச மக்கள் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். முள்ளிவாய்க்காலில் இறுதிப்போர் நடைபெற்ற ஆலய வளாகப்பகுதி ஒன்றிலேயே இவ்வாறான தகடுகள் மீட்கப்பட்டுள்ளன.