Header image alt text

கிளிநொச்சி – உதயநகர் கிழக்கு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்றுகாலை 7.45மணியளவில் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு காப்புறுதி நிறுவன கிளிநொச்சி கிளை முகாமையாளரான காந்தலிங்கம் பிறேமரமணன் (32) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா – வேப்பங்குளத்தைச் சேர்ந்த இவர் ஒரு பிள்ளையின் தந்தையென தெரியவருகிறது. இவர் தனது அலுவலக பணிப்பாளருடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு உதயநகர் கிழக்கில் இருந்து புறப்படும்போது உந்துருளியில் வந்த ஒருவர் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். Read more

வவுனியா ஆசிகுளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு முன்பாக உள்ள வீதியில் பஸ் உட்பட வாகனங்கள் வேகமாக செல்வதால் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

எனவே அவ்வீதியில் பாதுகாப்புத்தடை ஒன்றினை ஏற்படுத்தித்தருமாறு அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர். சிதம்பரபுரம் மயிலங்குளம் ஊடாக வவுனியா செல்லும் பஸ்கள் உட்பட பல வாகனங்கள் அவ்வீதியால் அதிக வேகமாகச் செல்வதனால் ஆசிகுளம் பகுதியிலுள்ள அரசினர் தமிழக் கலவன் பாடசாலைக்கு மாணவர்கள் சென்றுவருவதில் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதுடன் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. Read more

இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை தொடர்பான முதலாவது ஆலோசனை கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. ஜெனிவா மனித உரிமை பேரவையின் குழு அறையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதன்போது, இலங்கை குறித்து ஏற்கனே தயாரிக்கப்பட்ட பிரேரணையின் நகல் வரைவு ஆராயப்படவுள்ளது. கடந்த 25ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 40வது கூட்டத்தொடர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதன்போது எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை இலங்கை எதிர்க்குமாயின் அதன்மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். Read more

17 கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டமொன்றில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் தமது பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் அறிவித்திருந்தது.

மேலும், நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றும் நடாத்தப்படும் என அதன் பொதுச் செயலாளர் கமல் கித்சிறி தெரிவித்திருந்தார். இதேவேளை திட்டமிட்டப்படி இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என தொடரூந்து சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட இதனை தெரிவித்துள்ளார். Read more