கிளிநொச்சி கண்ணகிபுரம் பகுதியில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் வெடிபொருட்கள் இருப்பதாக காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து நீதிமன்ற அனுமதியுடன் அங்கு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்படி அங்குள்ள வாய்க்கால் ஒன்றில் இருந்து சில வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை அக்கராயன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.