இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நோர்வே நாட்டின் ராஜாங்க செயலாளர் மெரியானா ஹேகன் இன்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்வதாக கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது.

அங்கு அவர் நிலக்கண்ணி வெடி அகற்றும் முகமாலை பிரசேத்துக்கு சென்று பார்வையிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முக்கிய சந்திப்புகளையும் அவர் அங்கு நடத்துவார் என்று கூறப்படுகிறது. நேற்று நோர்வே நாட்டின் ராஜாங்க செயலாளர் மெரியானா ஹேகன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திருந்த நிலையில், இலங்கையில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்காக 7 மில்லியன் டொலர்கள் நிதியை வழங்குவதாக அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிட்டுக் கூறத்தக்கது.