மன்னார் – பெரியமடு இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரரொருவர் ஆயுதங்கள் தொகையுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். ரிதிமாலியத்த பிரதேசத்தில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து குறித்த ஆயுத தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

தானியங்கி துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 273 தோட்டாக்களும் விமான தாக்குலுக்கு பயன்படுத்தப்படும் தானியங்கி துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 73 தோட்டாக்களும் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.