சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிசாந்த தனசிங்கவை, குறித்த பதவியிலிருந்து நீக்க, அமைச்சரவை பத்திரமொன்று சமர்பிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த தினங்களில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிசாந்த தனசிங்கவை அப்பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரியவருகிறது. அத்துடன், குறித்த பதவிக்கு புதிதாக யாரை நியமிக்கவுள்ளனர் என்பது பற்றி தெரியவரவில்லை.