Header image alt text

புகையிரத தொழிற்சங்கங்கள் சில நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்த பணிப் புறக்கனிப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக புகையிரத தொழிற்சங்கம் கூறியுள்ளது.

அதேவேளை புகையிரத தொழிற்சங்கம் மற்றும் புகையிரத அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக அந்த சங்கம் கூறியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் கூறியுள்ளது.

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் இன்று 12.30 மணியளவில் ஏற்பட்ட தீ பரவல் சுமார் ஒரு மணிநேர போராட்டத்தின் பின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. விபுலானந்த கல்லூரியின் கணினி அறையில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.

அதனையடுத்து பண்டாரிக்குளம் பொலிஸார் மற்றும் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பண்டாரிக்குளம் பொலிஸார் பாடசாலை மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினார்கள். Read more

சித்திரவதைகள் தடுப்புக்கான ஐ.நா சபையின் உப குழு அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அலுவலகம் நேற்று இத்தகவலை வெளியிட்டுள்ளது.

சித்திரவதைகள் தடுப்புக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உபகுழுவின் இலங்கை விஜயம் ஏப்ரல் முற்பகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளபோதும், பயண விபரம் காலஎல்லை குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில், குறித்த விஜயத்தின் கால எல்லை உட்பட ஏனைய விபரங்கள் பயணத்திற்கு முன்னதாக அறிவிக்கப்படும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவை அலுவலகம் தெரிவித்துள்ளது. Read more

கடந்த 2017ஆம் ஆண்டு சிவனொளிபாத மலை அடிவாரத்தில் குறிப்பிட்ட சிலரால் சிவனொலிபாத மலையின் பெயர் மாற்றம் செய்யபட்டது.

அது அவ்வாறு இருக்கவே மஸ்கெலியா பிரதேசசபையின் அனைத்து உறுப்பினர்களும் ஒட்டு மொத்தமாக சபை ஒன்று கூடலின்போது ஏகமனதாக தீர்மானம் மேற்கொண்டு சபை அங்கீகாரத்துடன் கடந்த காலங்களில் இருந்ததை போல் சிங்கள மொழியில் ‘சிரிபாதய’ என்றும், தமிழ் மொழியில் ‘சிவனொளிபாதமலை’ என்றும் ஆங்கில மொழியில் ‘சிரிபாதய’ என்றும் பெயர்களை உள்ளடக்கியதாக பெயர் பலகை ஒன்று கட்டப்பட்டுள்ளது. Read more

இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக முழுமையாக பெண் பணியாளர்களைக் கொண்ட விமானம் ஒன்று நேற்றையதினம் சிங்கபூருக்கு சென்றுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீரீலங்கன் எயார்லைனுக்கு சொந்தமான UL306 என்ற விமானமே சிங்கபூரில் தரையிறங்கியுள்ளது. இந்த விமானம் நேற்று அதிகாலை 01.00 மணிக்கு சிங்கப்பூர் நோக்கி சென்றுள்ளதுடன், பிரதான விமானி, துணை விமானி உட்பட அனைத்து பணியாளர்களும் பெண்களாக இருந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நேற்று மாலை 6 மணியளவில் வவுனியா பொலிசாரால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, உக்கிளாங்குளம், 4 ஆம் ஒழுங்கைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நெற்றி மற்றும் கை என்பவற்றில் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் சம்பவ நேரம் தந்தையும் மகளும் இருந்துள்ளார்கள். மகள் உணவருந்தி விட்டு உறங்கியுள்ளார். Read more