புகையிரத தொழிற்சங்கங்கள் சில நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்த பணிப் புறக்கனிப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக புகையிரத தொழிற்சங்கம் கூறியுள்ளது.

அதேவேளை புகையிரத தொழிற்சங்கம் மற்றும் புகையிரத அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக அந்த சங்கம் கூறியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் கூறியுள்ளது.